மகிந்த கம்மம்பிலஅவர்கள் BA(Hons), M.Soc.Sc.(Birmingham), SLAS(Rtd.) ஆகிய பட்டங்களைக் கொண்டுள்ளார். அவர் அரச கொள்கை, அபிவிருத்தி நிர்வாகம், சமூக அபிவிருத்தி, தொழிற்கற்கைகள், உற்பத்தி திறன் மேம்பாடுமற்றும் நிறுவன இயலுமை விருத்தி ஆகிய விடயங்களில் அனுபவமும் திறமையும் கொண்டுள்ள அதேவேளை அவ்விடயங்கள் தொடர்பான செயற்பாடுகளில் முகாமைத்துவ ஆலோசகராகவும் பயிற்றுவிப்பாளராகவும் பணியாறியுள்ளார்.

அவரது 35 வருட அரச சேவையின் போது அவர் பல நிர்வாக மாவட்டங்கள் மற்றும் பிரிவுகளிலும் சேவையாற்றியுள்ளதுடன் இலங்கை நிர்வாக அபிவிருத்தி இலங்கை நிறுவனத்தின் மேலதிகப் பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகிய பதவிகளை வகித்ததுடன் இளைப்பாறிச்செல்லும் போது தொழில் அமைச்சின் செயலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். தேசிய உற்பத்தி திறன் செயலகம், தொழிலமைச்சிலுள்ள தொழில் வலையமைப்பு (JobsNet) உள்ளிட்ட மேலும் பல பொதுத்துறை நிறுவன விருத்திகளுக்கு அவர் காரணகர்த்தாவாக விளங்கியுள்ளார்.

ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு (UNHRC) உட்பட சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ஐடுழு) வருடாந்த மகாநாடுகள், ஆசிய உற்பத்தி திறன் நிறுவனம் (ILO) போன்ற சர்வதேச சபைகளில் அவர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். ஓய்வு பெற்றபின்னர் CWEயின் தலைவராகவும், கல்வியமைச்சின் வெளிநாட்டு நிதியீட்டத்திலான செயற்திட்டங்களில் தேசிய ஆலோசகராகவும், உலக வங்கியால் நிதியீட்டப்பட்ட கல்வித்துறை அபிவிருத்திக் கட்டமைப்பு மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களில் கண்காணிப்பு மற்றும் முகாமைத்துவ ஆலோசகராகவும் (ESDFP) அவர் பணியாற்றியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத் திணைக்களத்தில் அதிகாரப்பகிர்வு மற்றும் உள்ளுராட்சி கற்கைகள் மீதான பட்டப்பின் படிப்பு கற்கைநெறியின் இணை கற்கைநெறி ஒருங்கிணைப்பாளராகவும் வருகை தரும் விரிவுரையாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

நீதிபதிஎ.டபிள்யு.எ.சலாம் 18.9.1976இல் சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்து சட்டத்தரணிகள் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றதுடன் 1.1.1982 முதல் சிறிய நீதித்துறையின் உறுப்பினராகவும் அங்கத்துவம் பெற்றார். இவர் நீதவானாகவும், மாவட்ட நீதிபதியாகவும், நீதித்துறை ஆணைக்குழுவின் செயலாளராகவும், உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், வர்த்தக உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் தொழிற்பட்டுள்ளார். அவர் 2007 மார்ச்சில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டதுடன், பின்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அவர் 4.9.2014 அன்று மூன்று தசாப்தங்கள் நற்சேவை செய்த பிற்பாடு நீதித்துறையிலிருந்து ஓய்வுபெற்றார். 2015இல் நீதிச்சேவை சங்கத்தின் வருடாந்த மகாநாட்டில் ((JSA) முக்கிய உரையை வழங்கும்பொழுது நீதித்துறையின் சுயாதீனத்தின் ஊடாக பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வற்புறுத்தினார்.

இலங்கை நீதிபதிகள் நிறுவகத்தின் ஒரு சிரேஷ்ட வளவாளராகிய அவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன், 2016 நவம்பரில் இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமைகளை பொறுப்பேற்கும் பொழுது அந்த பதவிநிலையில் இருந்து அவர் விலகினார்.

இலங்கையின் தகவல் அறியும் உரிமை சட்டவாக்க வரைபுக்குழுவில் 2003/2015இல் ஒரு உறுப்பினராக கிஷாலி பின்ரோ ஜயவர்தன சேவையாற்றினார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில், சிறப்புத் தேர்ச்சியுடன் பட்டம் பெற்றுக்கொண்டதுடன் 1997–2007 வரை பொது சட்ட துறைசார் விடயங்களில் பணியாற்றியதுடன்உறுதியான கருத்து வெளிப்படுத்துகை (Fernando v the State, No 1189/2003/, 2005) உட்பட ஐநா மனித உரிமைகள் குழு முன்பாக சார்புடையவராகத் தோன்றி பொதுச் சட்ட தொழிலாற்றி வந்ததுடன், 2016 இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்காக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டவரைபை உருவாக்கியிருந்தார். 1998–2016 செப்ரெம்பர் வரைக்கும் சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் சட்டத்துறை ஆலோசகராகவும், இருந்து அப்பத்திரிகையின் சட்டத்துறைசார் விடயங்களுக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.

பொதுநலவாய கற்கைகள் நிறுவகம் (ICwS), இலண்டன் பல்கலைக்கழகம், அபிவிருத்தி கற்கைகள் நிறுவகம் (IDS), ஐக்கிய இராச்சியம் செசெக்ஸ் (Sussex) பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம், சித்திரவதைக்கான ஆய்வு நிலையம் (RCT), ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP), உலக வங்கி, சட்ட இயல் வல்லுனர்களின் சர்வதேச ஆணைக்குழு (ICJ) என்பவற்றிலும் அவர் சிரேஷ்ட சட்ட ஆலோசகராவும் மதியுரைஞராகவும் இருந்துள்ளார்.

சல்பேர்க் ஆய்வாளராகவும் WISCOMP (புதுடெல்லி) நிறுவனத்தின் அமைதிக்கான புலமையாளாராகவும் இருந்ததுடன் 2013ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தின் வருகைதரும் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். மேலும் 2014ஆம் ஆண்டிற்கான DR.விஜயவர்தனவின் விருதிற்காக இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தினால் அவர் ஏகமனதாக சிபாரிசு செய்யப்பட்டதுடன் தகவல் உரிமைக்காக குரல் கொடுப்போர் சார்பில்2016 இலும் அவர் இந்த விருதை ஏற்றுக்கொண்டார். Law & Society Trustஇன் பிரதிப் பணிப்பாளராகவும், LST ரிவ்யூ ஆய்விதழின் ஆசிரியராக 2004–2014 வரை இருந்துள்ளார். “சட்டம் ஒழுங்கு வீழ்ச்சி, (RCT, 2009, “நீதியை இன்னும் தேடிக் கொண்டு”(ICJ, 2010) மற்றும் “சர்ச்சரவுக்குள்ளான ஊடகம்”(Sage, 2015) என்பன இவர் எழுதியுள்ள நூல்களில் சிலவாகும்.

திரு.எஸ்.ஜி.புஞ்சிஹேவா ஒரு சட்டத்தரணியும் மனித உரிமைகள் துறையில் ஒரு செயற்பாட்டாளரும் ஆவார். மனித உரிமைகள் சட்டத்தரணி என்ற இயலுமையில் அவர் பல சர்ச்சைக்குரிய வழக்குகளில் தோன்றியதுள்ளதுடன் அவற்றில் 1980களின் பிற்பகுதியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் காணாமல் போனமை தொடர்பான வழக்கும் உட்பட பலநீதித்துறையில் அடையாளம் பொறித்த வழக்குகள் ஆகும்.

சமூக செயற்பாட்டாளர் என்ற வகையில் அவர் கடந்த 3 – 4 தசாப்தங்களின்பொழுது இலங்கையில் சிவில் உரிமை இயக்கங்களுடன் ஈடுபட்டிருந்தார். அவர் ஒரு துடிப்பான தொழிற்சங்கவாதியாகவும் இருந்துள்ளார். அவர் ஒரு கல்வியாளராக இருப்பதுடன் முரண்பாட்டு தீர்வு, மனித உரிமைகள் மொழியுரிமைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு போன்ற துறைகளில் பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார்.

அவர் ஒரு நிறைவான எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருப்பதுடன், சிங்களத்தில் 35 பிரசுரங்களின் எழுத்தாளராக இருப்பதுடன், பல சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைக் கட்டுரைகளினதும் ஆசிரியராக இருந்துள்ளார். அவற்றில் மனித உரிமைகள் கற்போம் (சாவித்திரி பிரசுராலயம், 2013) மொழியுரிமைகள் (சிங்களம்) (CPA, 2009), அமெரிக்க அரசியலமைப்பு மீதான எதிர்கால விருத்தி உறுதிப்பாடு (USAID, 2010) ஆகியனவும் உள்ளடங்குகின்றன. மேலும் அரசியலமைப்பு சட்டம் தொடர்பான 7 புத்தகங்களை சிங்களத்தில் மொழிபெயர்த்தும் உள்ளார் (CPA, 2015).

கலாநிதி. செல்வி திருச்சந்திரன் பெண்கள் கல்வி ஆய்வு நிலையம் (WERC)இன் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பானரும் நம்பிக்கை பெறுப்பாளரும் ஆவார். சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் சபை உறுப்பினராகவும்(SSA) மற்றும் நூலக சங்கத்தின் சபை உறுப்பினராகவும் சமூக அபிவிருத்தி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் சபை உறுப்பினராகவும் உள்ளார். பேராதெனிய பல்கலைக்கழகச் சபையில் அவர் சேவையாற்றியதுடன் ஐநா பெண்கள் சிவில் சமூக வதிவிடக் குழுவிலும் (2015-2017)பிரதிநிதித்துவம் செய்கிறார்.

அவர் பேராதெனிய பல்கலைகழகத்தில் கலைமானி பட்டம் பெற்றுள்ளதுடன் நெதர்லாந்தின் சமூக கற்கைகள் நிறுவனத்தில் பெண்கள் கற்கைகள் தொடர்பாக முதுமானி பட்டமும் பெற்றுள்ளார். மேலும் அம்ஸ்டெர்டமின் விரிஜே பல்கலைக்கழகத்தில் கலாசார மானிடவியல் தொடர்பில் கலாநிதி பட்டமும் பெற்றுள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றுள்ள கலாநிதி செல்வி அவர்கள் பால்நிலை சமத்துவமும் ஒருமைப்பாடும், பெண்ணியம் தொடர்பான ஆய்வுகள், பெண்கள் வலுவூட்டல், பெண்களும் மதமும், அரசியலில் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பான விடயங்களில் பங்களிப்பு செய்துள்ளார்.

விவாதங்களின் கூட்டு: உரையாடலும் கலந்துரையாடலும் (WERC, 2013), சமயம் எழுதுதல்: பெண்களின் இடம் (SSA, 2012), இலங்கையில் பெண்கள் இயக்கம்: வரலாறு, போக்குகள் (WERC, 2012), பெண் பேச்சு மாற்றுகைகள் : தமிழ் பெண்களின் தாலாட்டும் ஒப்பாரிக்குமுள்ளான ஒரு ஆராய்வு (விக்காஸ் பிரசுர இல்லம், புதுடெல்லி- 2001), மற்றும் யுத்தத்தில் ஏனைய பாதிக்கப்பட்டவர்கள்: கிழக்கு இலங்கையில் பெண்களைக் குடும்பத் தலைவர்களாகக் கொண்டோரின் அதிகரிப்பு (விக்காஸ் பிரசுர இல்லம், புதுடெல்லி- 1999) உள்ளிட்ட ஆங்கில நூல்களை எழுதியுள்ளார். அவர் பல கட்டுரை தொகுதிகளைத் தொகுத்துள்ளதுடன் அதில் காலனித்துவத்தின் பின்னரான இலங்கை பெண்கள் தொடர்பான கட்டுரைகள் (விஜித்த யாப்பா புத்தகசாலை-2011) அண்மையில் வெளிவந்ததாகும்.